பேருந்துப்பயண காதலில் விழுந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம்: 19 வயது இளைஞன் போக்ஸோவில் கைது.!

பேருந்துப்பயண காதலில் விழுந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம்: 19 வயது இளைஞன் போக்ஸோவில் கைது.!



Tiruppur Minor Girl Rape 

 

திருப்பூர் கல்லூரி சாலை பகுதியில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "எனது தயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் நான், எனது தங்கை, தம்பி, தந்தை, பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறேன். 

கடந்த ஆண்டு பள்ளிக்கு சென்றுவரும்போது, பனியன் நிறுவன தொழிலாளி ஆஷிக் (வயது 19) என்பவர் நட்பாக பழகினார். அதனைத்தொடர்ந்து நாங்கள் செல்போனில் பேசி வந்தோம். பள்ளிப்படிப்பு முடித்த பின்பும் எங்களின் நட்பு தொடரவே, கடந்த மாதம் ஆஷிக் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். நான் முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில், பின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தேன். 

விஷயம் எனது தந்தைக்கு தெரியவந்ததால், அவர் செல்போனை புரிந்துகொண்டார். சிம்மையும் உடைத்துவிட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து வேறொரு சிம் வாங்கி நான் பயன்படுத்தி வந்தேன். இந்த தகவலை அறிந்த ஆஷிக்கோ, மீண்டும் என்னை தொடர்புகொண்டு பேச, நான் பேச தயாராக இல்லை என்பதால் அழைப்பை துண்டித்தேன். இதனிடையே, எனது பாட்டிக்கு உடல்நலம் குன்றியதால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். 

வீட்டில் நான் தனியாக இருக்க, தந்தை, தம்பி, தங்கை ஆகியோர் பாட்டியுடன் மருத்துவமனையில் இருந்தனர். இதனை அறிந்துகொண்ட ஆஷிக், என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். பின் திருமணம் செய்து எங்காவது சென்று வாழலாம் என ஆசையாக பேசி வலுக்கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். 

நேற்று முன்தினமும் திடீரென வீட்டிற்கு வந்து பலாத்காரம் செய்து தப்பி சென்றார். இந்த விஷயம் தொடர்பாக எனது சித்தப்பாவிடம் தெரிவித்தேன். அவர் என்னை கண்டித்தார். என்னை ஏமாற்றி பலாத்காரம் செய்த ஆஷிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் ஆஷிக் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.