நம்பிக்கை துரோகம்.. காதலிக்கு ஜூஸில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த காதலன்.!!

நம்பிக்கை துரோகம்.. காதலிக்கு ஜூஸில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த காதலன்.!!



tirunelveli-girl-raped-by-love-boy

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி, மடத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்தார். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நர்சிங் கல்லூரியில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். 

காதலியை காண்பதற்கு சம்பவத்தன்று நாகர்கோவிலில் இருக்கும் உறவினரின் வீட்டில் தனியிருந்த சிவகுமார், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் காதலியை அழைத்து சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

Tirunelveli Girl

மயக்கம் தெளிந்ததும் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த பெண்மணி கதறி அழுது இருக்கிறார். திருமணம் செய்வதாக காதலன் சமாதானம் செய்த நிலையில், பெண் வீட்டாருக்கு விஷயம் தெரியவந்து அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். 

இதுகுறித்த வாக்குவாதம் இருவீட்டாரும் இடையே நடந்தபோது, சிவகுமாரின் தந்தை மகனின் செயலை கண்டிக்காமல் பெண் வீட்டினரை அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவரின் மீது புகார் அளிக்கவே, புங்கரை ஏற்ற காவல் துறையினர் சிவகுமார் மற்றும் அவரின் தந்தை பால்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.