நீங்கள் இந்த மாவட்டமா.? வியாழக்கிழமை 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.! தமிழக அரசு அறிவிப்பு.!

நீங்கள் இந்த மாவட்டமா.? வியாழக்கிழமை 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.! தமிழக அரசு அறிவிப்பு.!



thursday local holyday for 4 district

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188  வெளிநாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு  ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 27-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பணி நாளாக இயங்கும் என்று அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.