வேலை நேரத்தில் கஞ்சா.. ஆயுதப்படை காவலர் புகைத்ததால் மூன்று பேர் சஸ்பெண்ட்..!

வேலை நேரத்தில் கஞ்சா.. ஆயுதப்படை காவலர் புகைத்ததால் மூன்று பேர் சஸ்பெண்ட்..!


Three people suspended for smoking cannabis during work..

புதுக்கோட்டையில், ஆயுதப்படை காவலர் மூன்று பேர் கஞ்சா புதைத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் மோப்ப நாய் பிரிவு அலுவலகம் உள்ளது. இதில் இருக்கும் மோப்ப நாய்களை பராமரிக்க காவலர்கள் தனியாக உள்ளனர். இந்த பிரிவில் வேலை செய்து வந்த காவலர்கள் சேவியர் ஜான்சன், பழனிசாமி, அஸ்வித் ஆகிய மூன்று பேர் கஞ்சா புகைத்ததாக புகார் கூறப்பட்டது. 

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மூன்று காவலர்களையும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே நடவடிக்கை எடுத்து பணிவிடை நீக்கம் செய்துள்ளார். அவர்கள் மூன்று பேரும் போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் அதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

இதுதொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, மூன்று பேரும் வேலையில் இருந்தபோது கஞ்சா புகைத்ததனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்றனர். மேலும் மோப்ப நாய் பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மூன்று பேரும் பயன்படுத்தியதால், கஞ்சா இருப்பு குறைந்திருந்ததை காவல் சூப்பிரண்டு சோதனையின் போது கண்டுபிடித்ததாகவும், அதன்பேரில் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.