வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் அரசு செவிலியர்.. அலறிப்போன கணவன்.. நடந்த பரபரப்பு சம்பவம்.!

வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் அரசு செவிலியர்.. அலறிப்போன கணவன்.. நடந்த பரபரப்பு சம்பவம்.!


theni-andippatti-woman-selvi-murder-by-strangers-police

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த செவிலியர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம் ஆண்டிபட்டியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பாப்பம்மாள்புரம் பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் திண்டுக்கல்லில் தங்கியிருந்து கேட்டரிங் பணிகளை செய்து வந்துள்ளார். இவரின் மனைவி செல்வி (வயது 43). செல்வி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 17 வருடமாக செவிலியராக பணியாற்றி வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் - மகள் என 2 பிள்ளைகள் உள்ளனர். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுரேஷ் மனைவியை பிரிந்து திண்டுக்கல்லில் இருக்கும் நிலையில், இவருடன் குழந்தைகள் உள்ளனர். செல்வி ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். 

தம்பதிகள் இருவரும் பிரிந்து இருந்தாலும், குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவ்வப்போது போனில் பேசுவது இயல்பு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுரேஷ் தனது மனைவி செல்விக்கு தொடர்பு கொண்டும், அவர் அழைப்பை எடுக்கவில்லை. மேலும், சுவிட்ச் ஆப் என்றும் வந்துள்ளது. 

Theni

இதனால் உறவினர்களிடம் தகவலை தெரியப்படுத்தி செல்வியின் வீட்டிற்கு சென்று வர சுரேஷ் கூறிய நிலையில், வீட்டிற்கு உறவினர்கள் செல்கையில் வீடு பூட்டி இருந்துள்ளது. பின்னர், கதவை உடைத்து உள்ளே செல்கையில், செல்வி முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக இருந்துள்ளார். 

இந்த தகவல் சுரேஷுக்கு தெரியவர, அவர் குழந்தைகளுடன் அலறித்துடித்து வந்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த ஆண்டிபட்டி காவல் துறையினர், செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். 

இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதத்தால் கொலை நடந்ததா? குடும்ப சூழ்நிலையால் கொலை நடந்ததா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.