புஷ்பா படத்தால் அப்படியெல்லாம் எதுவும் ஆகவில்லை.. என்ன நடிகர் பகத் பாசில் இப்படி சொல்லிட்டாரே!!
யாரிடமாவது இதைப்பற்றி கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய இளைஞர்.. போக்சோவில் தூக்கிய போலீஸ்..!
யாரிடமாவது இதைப்பற்றி கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய இளைஞர்.. போக்சோவில் தூக்கிய போலீஸ்..!
ஆந்திர மாநிலம் வேப்பஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் இவரது உறவுக்காரர்கள் அனைவரும் வேலூர் மாவட்டம் பொன்னை பகுதியில் வசித்து வருகின்றனர்.
இதனால் சசிகுமார் அடிக்கடி வேலூர் சென்று தனது உறவினர்களை பார்த்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது சசிகுமாருக்கும் அவரது உறவுக்கார பெண்ணான 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட சசிகுமார் அந்த சிறுமியை நைசாக பேசி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இதைப் பற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்றும் மீறி கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் சசிகுமார் சிறுமியை மிரட்டி உள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி சசிகுமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி உள்ளார் என்ற திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.