அச்சச்சோ... என்னாச்சு.? ஒரு ஓட்டு கூட வாங்காத மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்.!

அச்சச்சோ... என்னாச்சு.? ஒரு ஓட்டு கூட வாங்காத மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்.!


The mnm candidate did not even get a single vote

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 

இதுதவிர தேமுதிக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் ஆங்காங்கே சில பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர். இந்த தேர்தலில் நகராட்சி வார்டு ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை என தெரியவந்துள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் வேட்பாளராக செங்கோல் என்பவர் போட்டியிட்டார். ஆனால் செங்கோலுக்கு தேர்தலில் ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.