சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை... கடலோர காவல் படை வீரருக்கு போலீசார் வலைவீச்சு..!!

சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை... கடலோர காவல் படை வீரருக்கு போலீசார் வலைவீச்சு..!!



The brutality of threatening and raping the girl... Police set a net for the Coast Guard soldier..

நான்கு பேர் சேர்ந்து, 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காவல்துறையினர், மூன்று பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான கடலோர காவல் படை வீரரை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும், 16 வயது சிறுமி வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். எனவே அவரது பெற்றோர் புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார் என்று கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, அந்த பகுதியில் உள்ள நான்கு பேர், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வீரக்குடியை சேர்ந்த துரைராஜ் (24), ரஞ்சித் குமார், அண்டங்குளம் புதுப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (22) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த குற்ற செயலில் ஈடுபட்ட மற்றொருவரான பணவயலை சேர்ந்த வடிவேலுவை தேடி வருகின்றனர். இவர் தமிழ்நாடு கடலோர காவல் படையில் பணியாற்றி வருகிறார்.