குட்டி தாதாவான விவசாயி; வளர்ச்சி பொறுக்காமல் போட்டுத்தள்ளிய நண்பன்.. தஞ்சாவூரில் பதறவைக்கும் சம்பவம் அம்பலம்.!

குட்டி தாதாவான விவசாயி; வளர்ச்சி பொறுக்காமல் போட்டுத்தள்ளிய நண்பன்.. தஞ்சாவூரில் பதறவைக்கும் சம்பவம் அம்பலம்.!



Thanjavur Papanasam Rowdy Murder Case 

 

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம், வெண்குடியை சேர்ந்த நபர் இளங்கோ. இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதமாக அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் அத்தையின் வீட்டில் வசித்து வந்தார். 

சம்பவத்தன்று இரவு நண்பர்களோடு மதுபானம் குடித்த கோபி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கோபியின் ரவுடி வாழ்க்கை அம்பலமானது.

ரவுடி கோபி மீது கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் இருக்கின்றன. இதனால் இறுதியாக கோபியுடன் மதுபானம் அருந்திய அவரின் நண்பர்களான ஆனந்த்பாபு, மதன், பிரவீன் ஆகிய மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். 

thanjavur

அப்போது, கோபி மற்றும் கைதாகிய மூன்று பேரும் சேர்ந்து பல கொலைகளை செய்திருக்கின்றனர். 2020 ஆம் ஆண்டு ஆனந்த் பாபு என்பவரை கள்ளக்காதல் விவகாரத்தில் நல்லூர் பகுதியில் வைத்து ஓட ஓட விரட்டி கொலை செய்தது இக்குழுவே. 

கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கோபி, ஆனந்த்பாபு ஜாமினில் வெளியே வந்து மீண்டும் ரவுடி செயல்களில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனிடையே உள்ளூரில் யார் கெத்து? என்ற போட்டி ஏற்பட, இருவரும் தனித்தனியாக களமிறங்கியுள்ளது. கோபியின் செயல்பாடுகள் அடுத்த தாதாவை போல அமைந்துள்ளது. 

இதனால் சம்பவத்தன்று இரவு கோபியை மதுபான பார்ட்டி என அழைத்த ஆனந்த்பாபு, தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்ற பழமொழிக்கேற்ப இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், அதிகாரிகள் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.