ஐவர் கும்பலால் சிறுமி சீரழிப்பு: வீடியோ வெளியானதால் சிக்கிய கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

ஐவர் கும்பலால் சிறுமி சீரழிப்பு: வீடியோ வெளியானதால் சிக்கிய கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



Thanjavur Papanasam Minor Girl Gang Rape 

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது. இதில் அதிர்ச்சிதரும் விஷயமாக சிறுமி ஐவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, அது வீடியோ எடுத்து வைக்கப்பட்ட விஷயமும் தெரியவந்துள்ளது.

சிறுமியும் - அபினேஷ் என்ற இளைஞரும் நட்பாக பழகி வந்த நிலையில், தனியாக பேச வேண்டும் என அழைத்துச்சென்று இருக்கிறார். அங்கு தனியாக வந்த சிறுமி, அபினேஷ் மற்றும் அவனது நண்பர்கள் நால்வர் என ஐவரால் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

சிறுமி பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் ராகுல் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஸ்ரீதரன், அரவிந்தன், ஸ்ரீகாந்த் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய ஒருவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.