அலட்சியத்தால் விபரீதம்: கொதிக்கும் குருமாவுக்குள் விழுந்து 2 வயது குழந்தை பரிதாப பலி.!

அலட்சியத்தால் விபரீதம்: கொதிக்கும் குருமாவுக்குள் விழுந்து 2 வயது குழந்தை பரிதாப பலி.!



Thanjavur Kumbakkonam Baby Died Falling Hot Kuruma

பானி பூரி குருமாவுக்குள் இரண்டு வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், செட்டிமண்டபம் ஐந்துதலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அனுசுயா. முருகேசன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

அனுஷியா வீட்டிலேயே இருப்பதால், குடும்ப வருமானத்திற்காக பானிபூரி கடை வைத்து நடத்திவருகிறார். பானி பூரி குருமா போன்றவற்றை வீட்டிலேயே செய்வது வழக்கம். 

thanjavur

இந்நிலையில், கடந்த மார்ச் 27 ஆம் தேதி குருமாவை அனுசுயா தயார் செய்துவிட்டு, கொதிக்கும் குருமாவை கீழே இறக்கி வைத்துள்ளார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது 2 வயது மகன் ரிஷி கால் தவறி குருமாவுக்குள் விழுந்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அனுசுயா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை ரிஷி, இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

குழந்தைகள் உள்ள வீட்டில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சிறு அலட்சியமும் விபரீதத்தில் முடியலாம். பெற்றோர்களே கவனமாக இருங்கள்.