பலத்த சத்தத்தோடு வெடித்து சிதறிய ஏசி கம்ப்ரஸர்... பழுது நீக்க சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு..!

பலத்த சத்தத்தோடு வெடித்து சிதறிய ஏசி கம்ப்ரஸர்... பழுது நீக்க சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு..!



Thanjavur Kumbakkonam AC Compressor Unit Explodes 1 Died

 

ஏசி கம்ப்ரஸர் வெடித்து சிதறியதால், அதனை பழுது நீக்க சென்றவர் பரிதாபமாக பலியாகினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருநாகேஸ்வரம் மேற்கு மடலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது வீட்டில் இருந்த ஏ.சி கம்பரசர் பழுதாகியுள்ளது. 

அதனை சரி செய்யும் பணிகளை அதே பகுதியை சேர்ந்த கணேஷ் மற்றும் அலாவுதீன் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அந்த சமயம் கம்பரசர்க்கு மின் இணைப்பு கொடுக்க முயற்சித்துள்ளனர்.

tamilnadu

அப்போது, பலத்த சப்தத்துடன் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில், இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருநீலக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.