மாமன் திரைப்படம் ஹிட் ஆனதும் நடிகர் சூரி எங்கே சென்று உள்ளார் பாருங்க! வைரலாகும் வீடியோ காட்சி....
பயங்கரம்... அவதூறாக பேசிய தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற மகன்... காவல்துறையில் சரண்.!

சென்னையில் தந்தையை மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த மகன் காவல்துறையில் சரண் அடைந்திருக்கிறார்.
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(55). இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் சுமித்ரா(28) மற்றும் ஜபரீஷ் (23) என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். சொத்து பிரச்சினை காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. மேலும் பாலசுப்பிரமணி என்பது பழக்கத்திற்கு அடிமையானவர்.
இவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர்களது வீட்டிற்கு கீழ் பகுதியில் உள்ள நடைபாதையில் வசித்து வந்தார் பாலசுப்பிரமணியன். இந்நிலையில் நேற்று அவரது மகள் சுமித்ராவிற்கு உடல்நிலை சரியில்லை என அவரது மகன் ஜபரீஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பி இருக்கிறார்.
அப்போது வீட்டிற்கு வெளியே மது போதையில் இருந்து தந்தை பாலசுப்ரமணியன் அவரது மகள் சுமித்ராவை பற்றி அவதூறாக பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகன் ஜபரீஷ் கீழே கிடந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல் ஆகியவற்றால் கடுமையாக தந்தையை தாக்கி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே துடித்துவிட்டு இறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிண்டி காவல்துறையை செல்போனில் அழைத்த ஜபரீஷ் தன் தந்தையை கொலை செய்ததை கூறி சரண் அடைந்திருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜபரிசை கைது செய்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.