"இமயத்தை எரிமலை என்ன செய்யும்?" திமுக அறிக்கைக்கு தமிழிசை சரவெடி பதில்.!

"இமயத்தை எரிமலை என்ன செய்யும்?" திமுக அறிக்கைக்கு தமிழிசை சரவெடி பதில்.!



Tamilisai Soundararajan Statement about DMK

திமுக சார்பில் கவர்னர்கள் எரிமலையுடன் விளையாட வேண்டாம் என்று கட்டுரை வெளியிடப்பட்டது. இந்த கட்டுரைக்கு பதிலடி தெரிவித்து பாண்டிச்சேரி & தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

இதுகுறித்த அறிக்கையில், "எரிமலை இமயங்களை எதுவும் செய்ய இயலாது. சிலந்தி வேடமிட்ட மூட்டை பூச்சிகளான உங்களின் சாயம் வெளுத்து வருகிறது. அது குறித்த பயத்திலேயே தினமும் நிழலுக்கும் அஞ்சி கவர்னர் குறித்து பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி இருக்கிறார்கள். சினிமா, சீரியலில் நடித்து பதவிக்கு வந்தவர்களுக்கு கேமரா மேனியா? மைக் மேனியா?. உங்களுக்கு தான் மோடி மீது பயம். அந்த பயத்தில் தான் குளிர் காய்ச்சல் வந்தது போல கட்டுரை எழுதுகிறீர்கள். 

tamilnadu

தெலுங்கு மொழியை பூர்வீகமாக கொண்டு வீடுகளில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு, தெலுங்கானாவில் ஆளுநராக நான் இருந்தாலும் அம்மாநில சட்டப்பேரவையில் திருக்குறளை கூறி தமிழ் இரத்தம் ஓடும் தமிழச்சியாக இருக்கிறேன். இந்த விஷயத்தை பலராலும் ஜீரணிக்க இயலவில்லை. கடந்த 3 ஆண்ட்டுகளாக தெலுங்கானாவின் பத்திரிகைகளை கவனித்தால் அம்மாநில அரசை அலறவிடுவது யார் என்பது உங்களுக்கு தெரியும். 

பொதுவெளியில் வாதங்களுக்கும், விவாதங்களுக்கும் விளக்கம் சொல்ல தெம்பு, திராணி இல்லாதவர்களே கட்டுரை எழுதுகிறார்கள். நீங்கள் எரிமலை என்று ஒப்புக்கொண்டால் நாங்கள் இமயமலைகள். எரிமலை இமயத்தை ஒன்றும் செய்ய இயலாது. சிலந்திகளால் சிங்கத்தினை ஒன்றும் செய்ய இயலாது" என்று தெரிவித்துள்ளார்.