எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது..!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது..!



Tamil Fisherman Arrested by SriLankan Navy 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், 3க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். 

3 படகுகளில் இருந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதனால் கோட்டைப்பட்டினம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

கடலுக்குள் சென்றவர்களை இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக மீட்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.