விராலிமலையில் உள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவில் மலைப்பாதையில், சிவன், பார்வதி சாமி சிலைகள் உடைப்பு.!

விராலிமலையில் உள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவில் மலைப்பாதையில், சிவன், பார்வதி சாமி சிலைகள் உடைப்பு.!



swami statue damaged in viralimalai

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ளது சுப்பிரமணியசாமி கோவில். சுமார் 1500 ஆண்டுகள் பழமையான பிரசித்திபெற்ற இந்த கோவில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். மேலும், முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமாசித்தி வழங்கிய இடமாகவும் திகழ்ந்து வருகிறது.

இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் மலைமேல் சென்று முருகனை வழிபடுவதற்காக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபுறத்தில் முருகன், சிவன், பார்வதி, மான், புலி உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் செய்து பக்தர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது கோரோனா தொற்று காரணமாக கோவில் மூடப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை ஓரத்தில் இருந்த சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்ட சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.