கழிவறைக்கு சென்ற தாய் கண்ட அதிர்ச்சி காட்சி.. திருமணம் முடிந்த 1 வருடத்தில் மகள் செய்த காரியம்..

கழிவறைக்கு சென்ற தாய் கண்ட அதிர்ச்சி காட்சி.. திருமணம் முடிந்த 1 வருடத்தில் மகள் செய்த காரியம்..



sucide

கணவன் செய்த கொடுமையால் திருமணம் முடிந்த 1 வருடத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாங்காடு புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த பர்கித்பீவி வயது (30). படுர்தீன் நகரைச் சேர்ந்தவர் இதாயத் உசேன் வயது( 32 ). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றநிலையில், இதாயத் உசேன் தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் இருவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பர்கித்பீவி சில தினங்களுக்கு முன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு தூங்க சென்றுள்ளனர். இன்று காலை பர்கீீீத் பீவியின் தாயார் மரியம் பீவி கழிவறைக்கு சென்றநிலையில், அங்கு கழிவு நீர் தொட்டியின் மூடி திறந்து இருப்பதை பார்த்துள்ளார்.

அருகில் சென்று எட்டி பார்த்தபோது அவரது மகள் பர்கித்பீவி கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலிசார், பர்கித்பீவி கணவரான இதாயத் உசேனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.