இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வார்களா? ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை... வெளியான அதிர்ச்சி தகவல்..!

இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வார்களா? ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை... வெளியான அதிர்ச்சி தகவல்..!



student-committed-suicide-by-jumping-in-front-of-train

சென்னை ஆவடி பகுதி சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகன் மோனிஷ் திருமுல்லைவாயலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். மோனிஷ் கல்லூரிக்கு செல்போன் எடுத்து சென்றதால் கல்லூரி நிர்வாகம் அதனை பறிமுதல் செய்தது.

இதனால் மாணவன் மோனிஷ் கல்லூரி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை வாங்குவதற்காக கல்லூரி சென்றுள்ளார். அப்போது அங்கு கல்லூரி நிர்வாகத்திற்கும் மாணவன் மோனிஷ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு கல்லூரியில் இருந்து மாணவன் மோனிசை வெளியில் அனுப்பியது.

student

இதனால் மனம் உடைந்த மாணவன் மோனிஷ் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் திருப்பதியில் இருந்து சென்னை செல்லக்கூடிய ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பின்பு அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.