BREAKING || கடலூர் கல்லூரியில் கழிவறையில் தூக்கில் தொங்கிய மாணவி..உருக்கமான கடிதம் சிக்கியது..!

BREAKING || கடலூர் கல்லூரியில் கழிவறையில் தூக்கில் தொங்கிய மாணவி..உருக்கமான கடிதம் சிக்கியது..!



student-commits-suicide-by-hanging-herself

கடலூரில் உள்ள தனியார் கல்லூரியின் கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம் இவரது மகள் தனலட்சுமி (19). இவர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

தற்போது கல்லூரியில் மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவி கல்லூரியின் பின்புறம் உள்ள கழிவறையில் அவரது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுபற்றி தகவலறிந்த கடலூர் புதுநகர் காவல்துறையினர் விரைந்து வந்து மாணவியின் உடலை பார்வையிட்டனர். அப்போது தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பையில் சோதனையிட்டபோது அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் தனக்கு தேர்வு பயம் உள்ளதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மாணவி தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.