அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
ஸ்ரீவில்லிபுத்தூர்: மடவார்வளாகம் அருகே சோகம்..! லாரி - பைக் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி.!
ஸ்ரீவில்லிபுத்தூர்: மடவார்வளாகம் அருகே சோகம்..! லாரி - பைக் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி.!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதி, விபத்து ஏற்பட வாய்ப்புள்ள அபாய அளவை கொண்டதாகும். இந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் முந்திச் செல்ல முயற்சிக்கும் போது, ஏராளமான விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் நடந்துள்ளன.
சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று முடிந்து, விபத்து ஏற்படா வண்ணம் ஏற்பாடுகள் செய்து, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டாலும், சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதை மற்றும் அலட்சியம் காரணமாக விபத்துகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, திருவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் தாத்தா, பாட்டியுடன் ஒன்றரை வயது குழந்தை அன்புச்செல்வன் சென்றுள்ளார்.
இவர்களின் இருசக்கர வாகனம் மீது வடமாநில லாரி மோதிய நிலையில், வாகனத்தில் இருந்து தாத்தா - பாட்டி தூக்கி வீசப்பட்டுள்ளனர். குழந்தை அன்புச்செல்வன் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக தலை நசுங்கி உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள், வெளிமாநில ஓட்டுனரை கைது செய்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த குழந்தையின் தாத்தா - பாட்டியான இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் விபத்து நேர்ந்தது தெரியவந்துள்ளது.