உயிரிழந்த அப்பா உடலுக்கு முன் திருமணம் செய்த மகன்.. நெஞ்சை உலுக்கும் பாசபோராட்டம்..!!

உயிரிழந்த அப்பா உடலுக்கு முன் திருமணம் செய்த மகன்.. நெஞ்சை உலுக்கும் பாசபோராட்டம்..!!


son-married-a-girl-in-front-of-his-father-body

தந்தை இறந்தும் அவரது உடல்முன்னே மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சார்ந்த ஊராட்சிமன்ற தலைவர் அய்யம்மாள். இவரது மகனுக்கு வரும் மார்ச் மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற உறவினர் பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

tamilnadu news

இந்நிலையில் அய்யம்மாளின் கணவர் உடல்நலக்குறைவால் உயிர் இழந்திருக்கிறார். இந்த சம்பவத்தால் இருதரப்பு குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் இருந்த நிலையில், மணப்பெண் சொர்ணமால்யா தந்தை முன்பே திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி உயிரிழந்த மணமகனின் சடலம் முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளனர்.