அட பாவி மனுஷா... ஆசையாய் வளர்த்த தாயை உலக்கையால் அடித்துக்கொன்ற மகன்.!

அட பாவி மனுஷா... ஆசையாய் வளர்த்த தாயை உலக்கையால் அடித்துக்கொன்ற மகன்.!



son killed foster mother

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ராசாபட்டியை சேர்ந்தவர்கள் சன்னாசி-வீரம்மாள் தம்பதி. இவர்களுக்கு இவர்களுக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் செல்வராஜ் என்பவரை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தனர். 8-ம் வகுப்பு மட்டுமே படித்த செல்வராஜ் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

செல்வராஜ் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்து அவ்வப்போது வளர்ப்புத்தாய் வீரம்மாளிடம் பணம் வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
வீரம்மாள் தனது மகன் செல்வராஜூக்கு ஒரு லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் இருந்து வந்த செல்வராஜ், வீரம்மாளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் பணம் இல்லை என்று வீரம்மாள் மறுத்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று மீண்டும் பணம் வேண்டும் என்று செல்வராஜ் கேட்டபோது பணம் இல்லை என்று வீரம்மாள் மறுத்து வீட்டின் அருகே குளிக்க சென்றுள்ளார்.
பணம் கேட்டு கொடுக்காததால் ஆத்திரமடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து வீரம்மாள் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த வீரம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் வீரம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் வளர்ப்பு தாயை கொலை செய்த செல்வராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.