சொத்தை பிரித்து தராததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

சொத்தை பிரித்து தராததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!



Son killed father for assets problem in virudhunagar

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் நடுகாடான். செருப்பு தைக்கும் தொழிலாளியான இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவரது மனைவியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் நடுக்காடான் தனது மகன் மணிகண்டனை துலுக்கன் குளத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

Virudhunagar

மேலும், தனது இரண்டு மகள்களுக்கும் உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்து, அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் பணம் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் மணிகண்டன் தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டன் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். இதில், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முக்கிய நிலையில் மணிகண்டன் வீட்டின் முன்பு கிடந்த பெரிய விரைவு கட்டியை எடுத்து தந்தையின் தலையில் கடுமையாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

Virudhunagar

இதில் பலத்த காயம் அடைந்த நடுக்கடான் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன்களை பரிதவிமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.