திருமணமான பின்பும் அடிக்கடி வீட்டிற்கு வந்த அக்கா.. ஆத்திரமடைந்த தம்பியின் வெறிச்செயல்.!

திருமணமான பின்பும் அடிக்கடி வீட்டிற்கு வந்த அக்கா.. ஆத்திரமடைந்த தம்பியின் வெறிச்செயல்.!



Sister who came home often even after marriage.. Angry brother's frenzy!

மதுரை மாவட்டம் கிருஷ்ணராஜபுரம் பகுதியில்  வசித்து வருபவர் ராமு. இவருக்கு தேவயானி என்ற மகளும் கண்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தேவயானிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்த மருது என்பவருடன் திருமணம் நடைபெற்று உள்ளது.

ஆனால் தேவயானி அடிக்கடி தனது தந்து வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இதனால் இதுகுறித்து தம்பி கண்ணன் அவரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அக்கா என்றும் பாராமல் அங்கிருந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

Muder

இதனையடுத்து அக்காவை வெட்டிக்கொலை செய்து விட்டோம் என்ற அச்சத்தில் நேரடியாக காவல் நிலையம் சென்று சரணடைந்தது நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த தேவயானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.