அதிர்ச்சி.. பைக்கிற்காக தந்தையை குத்தி கொலை செய்ய முயன்ற மகன்.. தாய் கண் முன்னே அரங்கேறிய கொடூர செயல்..!



shocking-the-son-tried-to-stab-his-father-to-death-for

திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆதிமூலம். இவர் அதே பகுதியில் டெய்லர் கடை ஒன்றை வைத்துள்ளார். ஆதிமூலத்திற்கு வெற்றிசெல்வன் என்ற ஒரு மகனும், கோமதி என்ற ஒரு மகளும் உள்ளனர். மேலும் வெற்றிச்செல்வன் சிஏ பட்டதாரி ஆவார். இவர் சென்னையில் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

 இந்நிலையில் வெகு நாட்களாகவே வெற்றிச்செல்வன் தனக்கு பைக் வாங்கித் தருமாறு தந்தை ஆதிமூலத்திடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ஆதிமூலத்திற்கு சென்னையில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெற்றிச்செல்வன் அந்த வீட்டை விற்று தனக்கு பணம் தர வேண்டும் இல்லையென்றால் விலை உயர்ந்த பைக் வாங்கி தர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Bike issues

இந்நிலையில் வெற்றி செல்வன் விருப்பத்திற்கு அவரது தந்தை ஆதிமூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது தந்தை வைத்து நடத்தும் டெய்லர் கடைக்கு சென்று பைக் வாங்கித் தருமாறு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஆதிமூலம் மறுப்பு தெரிவிக்கவே ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வெற்றிச்செல்வன் டெய்லர் கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது தந்தையை 14 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் ஆதிமூலம் சரிந்து விழவே அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் தப்பியோட முயன்ற வெற்றிசெல்வனை திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் ஒரு பைக்கிற்க்காக தனது தந்தையே கொலை செய்ய முயன்ற மகனின் துணிகர செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.