12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2வது கணவன்.! அதிர்ச்சி சம்பவம்.!



secong husband abused daughetr

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் வேலூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தாயின் 2வது கணவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியை சேர்ந்த நபருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அந்த தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதனையடுத்து ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு அந்த இளம்பெண் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணின் முதல் கணவனுக்கு பிறந்த 12 வயது மகளுக்கு 2வது கணவரான கார்த்திக் கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 29ம்தேதி மீண்டும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் கார்த்திக்.  இதனை சிறுமி, தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தனது இரண்டாவது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்திக்கை சிறையில் அடைத்தனர்.