ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு,..பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு,..பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!


schools-will-reopen-after-summer-leave-june-13

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இவர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.