சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.! காவல் நிலையத்தில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.! காவல் நிலையத்தில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.!



Sathankulam case enquiry

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடந்த 2019-ம் ஆண்டு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணை என்ற பெயரில் இருவரையும் போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்த தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

 தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குள் சென்று சீல் வைக்கப்பட்ட ஆய்வாளர் அறையில் இருந்த சீலை அகற்றி அதில் இருந்த வழக்கு சம்பந்தமான முக்கியமான ஆவணங்களை பறிமுதல் செய்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர டேபிளையும் பறிமுதல் செய்து சிபிஐ அதிகாரிகள் கொண்டு சென்றனர்.