15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கி, காதல் பெயரில் திருமணம் செய்ய கடத்தல்.. போக்ஸோவில் சிக்கிய காமுக நடன ஆசிரியர்.! 

15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கி, காதல் பெயரில் திருமணம் செய்ய கடத்தல்.. போக்ஸோவில் சிக்கிய காமுக நடன ஆசிரியர்.! 



Salem Edappadi 15 Aged Minor Girl Abused Pregnant Dance Master Culprit Under Pocso Arrested

நடனம் கற்றுக்கொடுப்பதாக சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய காமுகன், அவரை திருமணம் செய்கிறேன் என்று கடத்தி சென்று போக்ஸோவில் சிக்கினான்.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, நைனாம்பட்டி பகுதில் வசித்து வரும் 15 வயது சிறுமி, எடப்பாடியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வீட்டிற்கு, வெள்ளாண்டிவலசு கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 24) என்ற வாலிபர் அவ்வப்போது வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக மாணவி பயின்று வரும் பள்ளியின் ஆண்டு விழாவிற்காக, சிறுமிக்கு நடனம் கற்றுக்கொடுத்துள்ளார். அதன் பேரில் சிறுமியின் பெற்றோரிடமும் பழகி வந்த நிலையில், நடன ஆசிரியர் போல சரவணன் செயல்பட்டதால் பெற்றோர்களும் பெரிதாக எண்ணிக்கொள்ளவில்லை. 

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமி மாயமாகியுள்ளார். காலையில் மகளை காணாது பதறிப்போன பெற்றோர், உறவினரின் வீடுகளில் தேடியலைந்துள்ளனர். பின்னர், சரவணனின் மீது சந்தேகம் இருப்பதாக எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Salem

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்த நிலையில், சரவணன் நானும், மாணவியும் காதலிக்கிறோம். அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். அவருடன் பழனி வந்துள்ளேன் என தகவல் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து, மாணவிக்கு 15 வயதே ஆவதால் வழக்கு சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நடனம் சொல்லித்தருவதாக பழக்கத்தை ஏற்படுத்திய சரவணன், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததும் அம்பலமானது.

சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சரவணனின் மீது போக்ஸோவின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமி சேலம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.