பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுப்பது எப்படி? - சேலம் இயக்குனரிடம் பாடம் பயின்ற நட்புகள்.. வாக்குமூலத்தில் பரபரப்பு உண்மை அம்பலம்.!

பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுப்பது எப்படி? - சேலம் இயக்குனரிடம் பாடம் பயின்ற நட்புகள்.. வாக்குமூலத்தில் பரபரப்பு உண்மை அம்பலம்.!



Salem Director Vel Kshatriyan Issue New Statement

நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக விளம்பரப்படுத்தி பெண்களை திட்டமிட்டு வலையில் விழவைத்து ஆபாச படமெடுத்து மிரட்டிய சேலம் இயக்குனர் விவகாரத்தில் பல உண்மை அம்பலமாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, வீரப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் வேல் சத்ரியன் (வயது 38). ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் உள்ள கட்டிடத்தில் சினிமா கம்பெனி நடத்தி வரும் இவர், படம் எடுப்பதாக கூறி பல பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி தனது இச்சைக்கு பயன்படுத்தி பணம் பறித்து வந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வேல் சத்ரியன், ஜெயஜோதி (வயது 23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களின் அலுவலகத்தில் இருந்த கணினி, ஹார்டிஸ்க் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டன. 

இதில், பல இளம்பெண்களின் அரைநிர்வாண படங்கள், விடியோக்கள் இடம்பெற்று இருந்தன. வேல் சத்ரியனிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்களை குறிவைத்து கவர, புதிய படத்திற்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து பெண்களிடம் நல்லவர் போல பேசி நம்ப வைக்கும் பழக்கத்தை கொண்ட நபராக வேல் இருந்துள்ளார்.

Salem

மேற்படி நம்பிக்கையை உருவாக்கும் வகையில் ஜெயஜோதி மற்றும் பிற ஊழியர்கள் பேசியுள்ளனர். இதன் மூலமாக பெண்களின் போட்டோ, பயோடேட்டா பார்த்து பெண்களை தேர்வு செய்யும் வேல் சத்ரியன், அவர்களின் குடும்ப பின்னணி தொடர்பாக அறிந்துகொண்டு பெண்களை அலுவலகத்திற்கு வரவழைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து அத்துமீறி இருக்கிறார்.

மேலும், இவர்களின் கீழ்த்தரமான செயல் வெளியே செல்லாமல் இருக்க, அலுவலகத்திற்கு வரும் பெண்களுக்கு மதுபான விருந்தும் கட்டாயப்படுத்தி நடந்துள்ளது. இவனின் பின்புலத்தை அறிந்த அவனின் நண்பர்களும் பெண்களை மிரட்டுவது எப்படி? பேசிய மயக்குவது எப்படி? என்றும் கேட்டு வந்துள்ளனர். இதனால் அவனுக்கு உதவிய அவனின் நண்பர்கள் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.