தாய், மகளை கணவன் கற்பழிக்க, வாசலில் காவல் நின்ற மனைவி.. தமிழகத்தில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!
தாய், மகளை கணவன் கற்பழிக்க, வாசலில் காவல் நின்ற மனைவி.. தமிழகத்தில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!
குண்டரில் கைதான கஞ்சா விற்பனையாளர், ஜாமினில் வந்ததும் தாய் - மகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, மாசாப்பேட்டை கிராமம், அண்ணா நகரில் வசித்து வருபவர் பாஸ்கரன் @ பகுடு பாஸ்கரன் (வயது 33). இவரின் முதல் மனைவி இறந்துவிட்டதால், இரண்டாம் மனைவி துர்கா (வயது 30) என்பவருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் 40 வயதாகும் பெண், தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
பெண்மணியின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரித்து ஆற்காட்டிற்கு வந்துள்ளார். பெண்மணி இராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் ஷூ நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மகள் ஆற்காட்டில் செயல்படும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.
பெண்ணிடம் வழிய சென்று பேச்சுக்கொடுக்கும் பழக்கத்தை வைத்திருந்த பாஸ்கரன், எப்போதும் அவரை அவதூறான பார்வையால் கண்டிருக்கிறார். அவரை பெண்மணி கண்டுகொள்ளாமல் விரட்டி வந்துள்ளார். இதனால் பெண்ணை எப்படியேனும் அடைய வேண்டும் என்ற கோர எண்ணம் கொண்ட பாஸ்கரன் அதற்காக திட்டம் தீட்டி வந்துள்ளார்.
துர்காவுக்கும் - பாஸ்கரனின் மனைவிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் பாஸ்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 27ம் தேதி வெளியே வந்த பாஸ்கரிடம், மனைவி துர்கா கண்டதை கூறி ஏற்றிவிட்டுள்ளார்.
ஏற்கனவே எது சமயம் என காத்திருந்த துர்கா, பெண்ணை பழிக்கு பழிவாங்க திட்டமிட்டு கடந்த 28ம் தேதி இரவு 11 மணியளவில் பெண்ணின் வீட்டிற்குள் சென்ற பாஸ்கரன், கதவை வெளிப்புறமாக தாழிட்டு துர்காவை காவலுக்கு நிற்க வைத்துள்ளார். கத்தி முனையில் பெண்ணை கட்டிப்போட்டு மிரட்டிய பாஸ்கரன், பதறியடித்து வந்த மாணவியை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின், மாணவியை தனது செல்போனில் வீடியோ எடுத்து கழிவறையில் தள்ளிவிட்டு கதவை அடைத்துள்ளார். பெண்ணையும் கத்தி முனையில் பலாத்காரம் செய்த கொடூரன், அவரையும் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து இருக்கிறான். ஒருகட்டத்திற்கு மேல் தாய் - மகளை அதிகாலை 3 மணிவரை வெவ்வேறு தருணங்களில் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்ட கயவன், விஷயத்தை வெளியே கூறினால் வீடியோ நெட்டில் லீக்காகிவிடும் என கூறியுள்ளான். மேலும், எங்கிருந்தாலும் தேடி கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறான். இதனால் பயந்துபோன இருவரையும் பகடை காயாக்கி கயவன் பல நாட்கள் அத்துமீறி இருக்கிறான்.
ஒருகட்டத்திற்கு மேல் வாழ்க்கையில் விரக்தியடைந்த தாயும் - மகளும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பாஸ்கர், அவனின் மனைவி துர்கா ஆகியோரை ஆற்காடு - கண்ணமங்கலம் உழவர் சந்தையில் வைத்து கைது செய்தனர்.