விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி! நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மனதை ரணமாக்கும் சிசிடிவி காட்சி...
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு விபத்து சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது ஆட்டோ சக்கரம் ஏறி இறங்கிய சம்பவம், சிசிடிவி காட்சிகள் மூலமாக வெளியாகியுள்ளது.
சிசிடிவி காட்சியில் பதிவான விபத்து
அந்தக் காணொளியில், சிறுமி வாசலிலிருந்து ஓடி வருகிறாள். அப்பொழுது எதிரே வந்த ஆட்டோ டிரைவர், இடதுபுறமாக சிறுமி வருவதை கவனிக்காமல் நேரடியாக மோதி விடுகிறார். அதனால் குழந்தை கீழே விழ, ஆட்டோவின் சக்கரங்கள் குழந்தியின் மீது ஏறி இறங்கும் காட்சிகள் மனதை உலுக்கக்கூடியவையாக உள்ளன.
விபத்து நடந்தவுடன் அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டு டிரைவரை எச்சரித்தனர். பின்னர் வாகனத்தை நிறுத்தி சிறுமியை தூக்கி பார்த்த டிரைவர், மக்களின் உதவியுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தைக்கு சளி மருந்து வாங்கி கொடுத்த பெற்றோர்! அதிகாலை 4 மணிக்கு குழந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! துடிதுடித்து போன பெற்றோர்!
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்
மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார்ரின் விசாரணை
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதுடன், பலரது மனத்தையும் பதற வைக்கிறது.
ராமநாதபுரம்: வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மீது ஆட்டோ ஏறி இறங்கி விபத்துக்குள்ளானதில் சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழப்பு#Ramanathapuram | #Accident | #CCTV | #Child pic.twitter.com/RQF5sNV6DQ
— PttvOnlinenews (@PttvNewsX) July 5, 2025