19 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

19 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



rain warning for 19 districts in tamilnadu

தமிழகத்தின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

இன்று மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

tamilnadu

சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையானது 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். 

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவில் சிவகங்கையில் தலா 14 சென்டிமீட்டர், தஞ்சாவூரில் தலா 13 சென்டிமீட்டர், கடலூரில் தலா 12  சென்டிமீட்டர் மற்றும்  திருவள்ளூர், மயிலாடுதுறையில் தலா 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.