தல ரசிகர்களே ரெடியா.. அஜித் பிறந்தநாளில் டிரிபிள் ட்ரீட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.!
வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.