தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!



Rain in tamilnadu

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனத்தால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.