#RainAlert: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

#RainAlert: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!


Rain alert in 5 days tamilnadu

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.rainதொடர்ந்து இன்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வீரகனூர் கடலூர், சேலம், வேப்பூர் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

மே 29,30 போன்ற நாட்களில் குமரிக்கடல், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.