#Alert: அடுத்த 5 நாட்களுக்கு கோட்டித்தீர்க்கப்போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா?...!

#Alert: அடுத்த 5 நாட்களுக்கு கோட்டித்தீர்க்கப்போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா?...!



Rain alert for tamilnadu and chennai

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.rainநாளை முதல் வரும் 26-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.