#RainAlert: அடுத்த 24 மணிநேரத்தில் கொட்டித்தீர்க்கபோகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?.! கடும் எச்சரிக்கை.!!

#RainAlert: அடுத்த 24 மணிநேரத்தில் கொட்டித்தீர்க்கபோகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?.! கடும் எச்சரிக்கை.!!


rain alert for 25 distriscts

தமிழகத்தின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 25 மாவட்டங்களில் கனமழை பெய்யவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக குமரிகடல் மற்றும் அதனை ஓட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை பலத்தக்காற்று வீசப்படும் என்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.