#RainAlert: தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த இடங்களில் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

#RainAlert: தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த இடங்களில் தெரியுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்..!



rain alert for 21 districts in tamilnadu

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்ட கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், தேனி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் செலவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று குமரிகடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.