பீரியட்ஸ் நா பிரச்சனை இல்லை., நான் பார்த்துகிறேன்.. நீ வீட்டுக்கு வா... மாணவி - பேராசிரியரின் அதிர்ச்சி ஆடியோ வைரல்.!

பீரியட்ஸ் நா பிரச்சனை இல்லை., நான் பார்த்துகிறேன்.. நீ வீட்டுக்கு வா... மாணவி - பேராசிரியரின் அதிர்ச்சி ஆடியோ வைரல்.!



professor-abuse-speech-with-girl-student-audio-leaked-t

கல்லூரிக்குசெல்லும் மாணவியிடம் பேராசிரியர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் நர்சிங் கல்லூரியில், சதீஷ் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் மாணவி ஒருவரை மிரட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், கல்லூரி மாணவியை பேராசிரியர் தனிமையில் இருக்க அழைக்கிறார். மேலும், அவர் எதோ பிரச்சனையில் சிக்கி இருப்பதாக தெரியவருகிறது. அதனை வைத்து மாணவியை ஆசிரியர் மிரட்டுகிறார். 

இதனால் அந்த கல்லூரி மாணவி பிரச்சனையை இத்தோடு முடித்து விடலாம் என்று கூறுகிறார். எனக்கு மாதவிடாய் நாட்கள், வலி அதிகமாக இருக்கும். இந்த ஒருமுறை மன்னித்துவிடுங்கள்., இதற்கு மேல் என் மீது கம்பளைண்ட் வராது. பிளீஸ் சார் என்று கதறுகிறார். 

ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வரும் ஆசிரியரோ, நீ வா வலி அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ எப்போது புறப்பட்டு வீட்டிற்கு வருவாய்?.. பேருந்தில் ரூ.10 செலவில் வந்துவிடலாம். சீக்கிரம் வா என தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார். 

professor

மாணவியோ எனக்கு மாதவிடாய் நாட்களாக இருப்பதால் வர இயலாது. என்னை விட்டுவிடுங்கள் என்று இறுதிவரை கெஞ்சி கதறுகிறார். இறுதியில் ஆசிரியர் சுதாரித்தாரா? என்று தெரியவில்லை. நான் உன் மீது பல புகார்கள் வைத்துள்ளதால், அவை குறித்து விசாரிக்கவே வீட்டிற்கு அழைத்தேன். உனக்கு பிடிக்கவில்லை என்றால் வரவேண்டாம் என  கூறுகிறார். 

விசாரணையில், மாணவ - மாணவிகள் பயின்று வரும் கல்லூரியில், இருவரும் பேசிக்கொள்ளக்கூடாது என விதி உள்ளது. இதனை மீறி பேசி சிக்கிக்கொள்ளும் மாணவிகளை மிரட்டி வீட்டிற்கு அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.