தனியார் பஸ் கார் நேருக்கு நேர் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை..!

தனியார் பஸ் கார் நேருக்கு நேர் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை..!


private-bus-collided-with-a-car-4-injured-at-namagiripe

நாமகிரிப்பேட்டை அருகே தனியார் பஸ் கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம்,ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் அதேபோல் ஆத்தூரிலிருந்து ராசிபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சும் 
ஆயில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்துபோது எதிர்பாராதவிதமாக  மோதி விபத்துக்குள்ளானது.

Namagiripettai

இந்த விபத்தில் பஸ்,கார் இரண்டும் சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தன. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயில்பட்டி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.