அதிமுக, திமுகதான் மொத்த ஊழலுக்கும் காரணம் - போட்டுத்தாக்கிய பிரேமலதா விஜயகாந்த்.!

அதிமுக, திமுகதான் மொத்த ஊழலுக்கும் காரணம் - போட்டுத்தாக்கிய பிரேமலதா விஜயகாந்த்.!



Premalatha Vijayakanth Viluppuram Speech

விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, 18-ம் ஆண்டு தொடக்க விழா, ஏழை-எளிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்தது. 

இவ்விழாவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து. அவர் பேசுகையில், "ஏழை, எளிய மக்களை வறுமையில் இருந்து மீட்கத்தான் விஜயகாந்த் தேமுதிக இயக்கத்தை நடத்தி வருகிறார். 

premalatha vijayakanth

விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் பேசுவது மற்றும் நடப்பதில் மட்டும் தான் தொய்வு ஏற்பட்டுள்ளது. மக்களை சந்திக்க நேரம் வரும்போது மக்களை சந்திப்பார். மின்கட்டண உயர்வு ஒருபுறம் என்றால், மறுபுறம் மின்சாரமே இல்லை. தமிழகம் பல இலட்சம் கோடி கடனில் இருக்கிறது. திமுக, அதிமுக இயக்கமே மொத்த ஊழலுக்கும் காரணம்" என்று தெரிவித்தார்.