கரூர் அருகே பரபரப்பு.. தற்கொலை செய்து கொண்ட மாணவி.. பாதி எரிந்த நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார்!

கரூர் அருகே பரபரப்பு.. தற்கொலை செய்து கொண்ட மாணவி.. பாதி எரிந்த நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார்!



Police recover college student body in Karur

கரூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பாதி எரிந்த நிலையில் போலீசார் மீட்ககப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் அழகர்சாமி - தாயாரம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகள் சுபா ஹரிணி கருவில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

Karur

எந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து உடனடியாக குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மகளின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த லாலாபேட்டை போலீசார் சுடுகாட்டில் பாதி எரிந்த மாணவியின் உடலை தண்ணீர் ஊற்றி கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Karur

மேலும் கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அல்லது திட்டமிட்ட கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டறை மறைத்து குடும்பத்தினர் தகனம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.