வெளியே மசாஜ் சென்டர், உள்ளே விபச்சாரம்!. காவல்துறையின் அதிரடி சோதனையில் சிக்கிய புரோக்கர்கள்!.

வெளியே மசாஜ் சென்டர், உள்ளே விபச்சாரம்!. காவல்துறையின் அதிரடி சோதனையில் சிக்கிய புரோக்கர்கள்!.



police-arrest-4-broker

தற்போது மசாஜ் சென்டர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து கொண்டு வருகிறது.  சென்னையில் எண்ணற்ற மசாஜ் சென்டர்கள் உள்ளன.  

இதேபோல் மதுரையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வந்த 4 புரோக்கர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


மதுரை மாவட்டம், வாசுகி நகர் 3 வது தெருவில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், விபச்சார தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர்.

மேலும் பெண்களை வைத்து விபச்சாரத்திற்க்கு உட்படுத்திய புரோக்கர்கள் நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அங்கு நடந்த அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.