கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்து செல்போனை ஆய்வு செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி...

கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்து செல்போனை ஆய்வு செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி...



Physical education teacher arrest by sexually harassing

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். சுந்தர்சிங் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் அதே பள்ளியில் பிளஸ் 1 மாணவியுடன் சுந்தர்சிங் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சுந்தர்சிங் மனைவி அவரின் செல்போனை ஆய்வு செய்த போது அதில் அந்த மாணவி உட்பட பல்வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார்.

Physical education

அதனையடுத்து மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாணவி, சுந்தர்சிங் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார்  சுந்தர்சிங்கை கைது செய்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.