நண்பர்களுடன் இன்பசுற்றுலா, இறுதிசுற்றுலாவான சோகம்: மென்பொறியாளருக்கு நேர்ந்த பரிதாபம்.!

நண்பர்களுடன் இன்பசுற்றுலா, இறுதிசுற்றுலாவான சோகம்: மென்பொறியாளருக்கு நேர்ந்த பரிதாபம்.!



Perambalur Kunnam Man Died 

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், நன்னை மேற்குத் தெருவை சேர்ந்தவர் அழகப்பன். இவரின் மகன் அகிலன் (வயது 28).

இவர் மென்பொறியாளராக பெங்களூரில் வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனது நண்பர்களோடு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்திற்கு சென்றுள்ளார். 

அங்கு இவர்கள் பரிசல் படகு உதவியுடன் மணல்மேடு பகுதிக்கு சென்ற நிலையில், ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். அச்சமயம், கரையின் மீது ஏறி குதித்ததாக தெரியவருகிறது. 

இதனால் தலையில் பலத்த காயமடைந்தவர், நீரில் அசைவின்றி இருந்துள்ளார். இதனைக்கண்ட நண்பர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் அனுப்பி வைத்தனர்.

அங்கு அகிலனின் மரணம் உறுதி செய்யப்படவே, காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.