புஷ்பா படத்தால் அப்படியெல்லாம் எதுவும் ஆகவில்லை.. என்ன நடிகர் பகத் பாசில் இப்படி சொல்லிட்டாரே!!
சுடுகாட்டிற்கு சடலத்தை புதைக்க சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
சுடுகாட்டிற்கு சடலத்தை புதைக்க சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற மூதாட்டி நேற்றிரவு உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சடலத்துடன் சுடுகாட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு இருந்த எரிமேடை மற்றும் சுடுகாட்டை அழித்து விட்டு அதன் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர சடலத்துடன் புதைக்க வந்த உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பிறகு சர்வேயரை வைத்து அதிகாரிகள் நிலத்தை அளந்து பார்த்தபோது கட்டிடம் கட்டப்பட்ட இடம் சுடுகாடு இல்லை என்பதும், பக்கத்தில் இருப்பதுதான் சுடுகாடு என்பதும் தெரியவந்தது. இதுகுறித்த தகவலை அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறி, பக்கத்தில் உடலை அடக்கம் செய்யுமாறு அதிகாரிகள் கூறினர்.
ஆனால் கடந்த 40 ஆண்டுகாலமாக அடக்கம் செய்த இடத்தை விட்டு, திடீரென்று வேறு இடத்தில் உடலை அடக்கம் செய்யுங்கள் என்று கூறினால், அது எப்படி என்று அதிகாரிகளுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து திருவள்ளூர் வட்டாச்சியர் இந்த இடத்தில் உடலை புதைக்கக்கூடாது அப்படி புதைத்தால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை கொடுத்தார்.இதனால் அந்த மூதாட்டியின் உடலை அருகில் புதைத்து விட்டு சென்றனர்.