பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் சஸ்பெண்ட்.. மீண்டும் சேர்க்க பெற்றோர்கள் சாலைமறியல்.!

பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் சஸ்பெண்ட்.. மீண்டும் சேர்க்க பெற்றோர்கள் சாலைமறியல்.!



Parents protest for teacher return to school

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கருணாகரன் என்பவரை விழுப்புரம் மகளிர் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கருணாகரனை விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர் சஸ்பெண்ட் செய்தார்.

Villupuram

இதனிடையே ஆசிரியர் கருணாகரன் குற்றமற்றவர் என்று கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் குற்றச்சாட்டை நீக்கிவிட்டு அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேறு பள்ளியில் சேர்த்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

Villupuram

இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு கலைந்து சென்றனர். இதனிடையே விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரண்டு வந்து முற்றுவிட்டு முழக்கங்களை எழுப்பினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.