திருமணத்தின் போது 7 மாத கர்ப்பம்! கணவன் வார்த்தையை கேட்டு தாய் அரங்கேற்றிய கொடூரம்! அம்பலமான பகீர் நாடகம்!

திருமணத்தின் போது 7 மாத கர்ப்பம்! கணவன் வார்த்தையை கேட்டு தாய் அரங்கேற்றிய கொடூரம்! அம்பலமான பகீர் நாடகம்!


parents-killed-baby-for-doubt

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் வசித்து வருபவர் அமல்ராஜ். இவரது மனைவி சுஷ்மிதா இவர்களுக்கு விகாஷ் என்ற 11 மாத குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விகாஸ் வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்துள்ளார். அதனை தொடர்ந்து மேலும் தனது குழந்தை தண்ணீரில் தவறி விழுந்து இறந்ததாக சுஷ்மிதா போலீசாரிடமும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், குழந்தையின் பெற்றோர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து இருவரிடமும் கிடுக்குபுடி விசாரணை மேற்கொண்ட நிலையில் தாங்கள் இருவரும்தான் குழந்தையை கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, 2018 ஆம் ஆண்டு சுஷ்மிதா பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

baby dead

இந்நிலையில் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் சுஷ்மிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்த நிலையில் இரு குடும்பத்தார்களும் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான இரு மாதங்களிலேயே குழந்தை பிறந்தது.ஆனால் இது தனது குழந்தை இல்லை என அமல்ராஜ் கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

 மேலும் அவனுடைய பெற்றோரும் குழந்தையை தூக்கவோ, பார்க்கவோ இல்லை. இந்நிலையில் அமல்ராஜ் நமக்கிடையே பிரச்சினை வர காரணம் குழந்தைதான். அதை கொன்று விடுவோம் என்று கூறிய நிலையில் சுஷ்மிதாவும்  குழந்தையை தண்ணீர் நிரம்பிய  வாளியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தை வாளியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கணவன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.