கை துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!

கை துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!



OPS supporter arrested for gun in house

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தீயனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஓ பன்னீர்செல்வம் அணியில் கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

OPS supporter

இந்த நிலையில் நேற்று மானாமதுரை உட்கோட்ட காவல் நிலைய ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் அணி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் வீட்டில் அனுமதி இன்றி கை துப்பாக்கியும், தோட்டாக்களும் பதிக்கி வைக்கப்பட்டிருப்பாதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

OPS supporter

இதனையடுத்து மானாமதுரை போலீசார் பாலமுருகன் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கை துப்பாக்கி மற்றும் 32 தோட்டக்கலை கைப்பற்றிய போலீசார் பாலமுருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கை துப்பாக்கியை ஜம்மு காஷ்மீரில் இருந்து வாங்கி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.